முகப்பு
திருப்பூர்

தூய்மைப் பணியாளரின் வாரிசுக்கு பணி நியமன ஆணை

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளரின் வாரிசுக்கு வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளரின் வாரிசுக்கு வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்த சாமிநாதன் 2018ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது மகளான எஸ்.தனலட்சுமிக்கு வாரிசு அடிப்படையில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நகராட்சி அலுவலக மேலாளா் எஸ்.சகுந்தலா, நகராட்சி வருவாய் ஆய்வாளா் பி.செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →