கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தது ஐபிஎல் 2026க்கு உதவும்: பட்லர்
இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லர் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றது குறித்து...
இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லர் (35 வயது) கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவது ஐபிஎல் 2026 சீசனுக்கு உதவும் எனக் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் பட்லர் மிகவும் மோசமாக விளையாடினார். அவரது அணி அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்று வெளியேறியது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஜோஷ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். குஜராத் அணி முதல் போட்டியில் மார்ச் 31ஆம் தேதி பஞ்சாபுடன் மோதுகிறது.
Advertisement
Advertisement
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 87 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 10.87ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 116ஆக இருந்ததும் கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் கோப்பையை 2022ல் வென்ற குஜராத் அணியில் முக்கியமான வீரராக இருக்கும் பட்லர் ஃபார் தி லவ் ஆஃப் கிரிக்கெட் எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:
நான் கிரிக்கெட்டை விட்டு தள்ளி இருக்க நேரமே கிடைக்கவில்லை. தற்போது, அதற்கான சரியான நேரம் வந்திருக்கிறது. இதுதான் நான் எதிர்பார்த்த நேரமாக இருக்கிறது.
நிச்சயமாக, டி20 உலகக் கோப்பையில் நான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. எனக்கு கிரிக்கெட் பற்றி யோசிக்காமல் அதைவிட்டு தள்ளி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இந்த வாரம் முழுமையாக ஓய்வெடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். புத்துணர்வாக இருந்தது. நான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாதது ஏன் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால், உண்மையில் என்ன பிரச்னை என்பது தெரியவில்லை.
உங்களது கடின உழைப்பு, நோக்கம் எல்லாமே நன்றாக விளையாட வேண்டும் என்பதற்காகத்தான். சில நேரங்களில் அது அப்படி ஆவதில்லை. அதைதான் நான் புரிந்துகொள்கிறேன். முயற்சியில் குறைகள் இல்லை; சில சமயங்கள் அப்படி நடப்பதில்லை என்றார்.
Jos Buttler hopes short break from cricket will help him in IPL 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.