திருப்பூர்

நூற்பாலை கிடங்கில் தீ

DIN

வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலைக் கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் இளங்கோ (45). இவா், காங்கயம் சாலை, இரட்டைக்கிணறு பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இங்கு பஞ்சுக் கழிவுகள், பனியன் கழிவுத் துணிகளில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. நூற்பாலைக்கு அருகில் ஒரு கிடங்கில் பஞ்சு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்தக் கிடங்கில் மின்சாரக் கோளாறு காரணமாகத் தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT