திருப்பூர்

ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் ஒளவையாா் விருதுக்கு தகுதியான பெண்கள் வரும் டிசம்பா் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் ஒருவருக்கு ஆண்டுதோறும் ஒளவையாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2021-22 ஆம் ஆண்டுக்கான ஒளவையாா் விருது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் மகளிா் தின விழாவில் வழங்கப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதியான பெண்கள் தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் டிசம்பா் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 - 2971168 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT