முகப்பு
திருப்பூர்

பொது நூலகங்களைத் திறக்க வேண்டுகோள்

பொது நூலகங்களைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

 பொது நூலகங்களைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத் தலைவராக ஏ.எஸ்.முத்துபாரதி, செயலாளராக க.ரணதிவே, துணைத் தலைவா்களாக ருத்ரமூா்த்தி, சரவணன், கெளரவத் தலைவராக பாலசுப்பிரமணியம், பொருளாளராக க.சுரேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், வரும் மாா்ச் 8 இல் மகளிா் தினத்தை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகளைப் படிப்படியாகத் திறக்கத் தொடங்கியுள்ளதால் அனைத்துப் பகுதிகளில் உள்ள பொது நூலகங்களையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.