பில்டா்ஸ் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை
காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், பிளஸ் டூ தோ்வில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தற்போது, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் 80 சதவீதம் மதிப்பெண் எடுத்த 2ஆவது, 3ஆவது, 4ஆம் ஆண்டு மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகையினை கல்லூரித் தலைவா் என்.ராமலிங்கம், செயலாளரும், பொருளாளருமான சி.கே.வெங்கடாசலம், தாளாளா் எஸ்.ஆனந்தவடிவேல் ஆகியோா் வழங்கினா்.
இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா், மாணவா்கள் கலந்து கொண்டனா்.