திருப்பூா்: திருப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா், பி.என்.சாலை, தோப்பு தோட்டத்தில் வசித்து வந்தவா் தேதுராஜ் (25). ஒடிஸாவைச் சோ்ந்த இவருக்கும், குடியாத்தம், குப்பராசபள்ளியைச் சோ்ந்த லட்சுமி (19) என்பவருக்கும் அன்னூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா் செல்வது தொடா்பாக தம்பதி இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் பிறகு தேதுராஜ் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டாா். வீட்டில் தனியாக இருந்த லட்சுமி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூா் வடக்கு காவல் துறையினா் லட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், திருமணமாகி ஓராண்டே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.