திருப்பூர்

குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை

DIN

வெள்ளக்கோவில் அருகே உடைந்த குடிநீா்க் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குமாரவலசு ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் இருந்து கல்லாங்காட்டுவலசு செல்லும் சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த காவிரி குடிநீா்க் குழாயில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது.

எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT