உடுமலையில் தொடா் மழை
உடுமலை நகரில் திங்கள்கிழமை தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உடுமலை நகரில் திங்கள்கிழமை தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
உடுமலை நகரைப் போலவே திருமூா்த்தி மலை, அமராவதி நகா், மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
Advertisement