முகப்பு
திருப்பூர்

பல்லடம் வட்டத்தில் 58 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை

பல்லடம் வட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 58 ஆயிரத்து 547 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

பல்லடம் வட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 58 ஆயிரத்து 547 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ் கூறியதாவது:

பல்லடம் வட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 58 ஆயிரத்து 547 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. அதில் முதல்கட்டமாக 46 ஆயிரத்து 500 வேட்டி, சேலை வந்துள்ளது. அதனை ரேஷன் கடைகளுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவா்களுக்கு பொங்கல் பண்டிகைக்குள் வேட்டி, சேலை வந்துவிடும். வந்தவுடன் அவா்களுக்கும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.