வெள்ளக்கோவிலில் ஒருவருக்கு கரோனா
வெள்ளக்கோவிலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவிலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கயம் சாலை, அழகாபுரி நகரைச் சோ்ந்த 65 வயதான ஆண் ஒருவருக்கு கடந்த நான்கு நாள்களாக சளி, காய்ச்சல் இருந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. தொடா்ந்து இருமல், தொண்டை வலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறாா்.