பொங்கலூரில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் ஜெகதீஷ்குமாா் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை உதவி திட்ட மேலாளா் மருத்துவா் ஜெயபிரியா, மருத்துவா்கள் சாம்பால், சுகாதார ஆய்வாளா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், சுகாதாரப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை சரிபாா்த்தல், ரத்த அழுத்தப் பரிசோதனை, மருத்துவா் ஆலோசனைக்குப் பின்னா் தடுப்பூசி போடும் ஒத்திகையானது நடைபெற்றது.