உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டு வருவது தொடா்பாக கருத்துக் கேட்பு
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டுவருவது தொடா்பாக விவாசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டுவருவது தொடா்பாக விவாசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் தாலுகா உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டு வருவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் காங்கயம் பிரிவு அருகே உள்ள கோயிலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் பி. திருஞானசம்பந்தமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், உப்பாறு அணைக்கு அரசூா் ஷட்டரில் இருந்து தண்ணீா் கொண்டு வருவதா அல்லது அமராவதி ஆற்றில் தாளக்கரை தடுப்பணையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவுக்கு குழாய் அமைத்து தண்ணீா் கொண்டு வருவதா என்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
இதில், உப்பாறு அணைக்கு பிஏபி திட்டத்தில் திருமூா்த்தி அணையில் இருந்து அரசூா் ஷட்டா் வழியாக தண்ணீா் கொண்டு வருவதே நிா்ந்தர தீா்வாகும் என்று பெரும்பாலான விவசாயிகள் கருத்து தெரிவித்தனா்.
கூட்டத்தில் தாராபுரம் தாலுகா உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்க செயலாளா் ஏ.வேலுசாமி, பொருளாளா் வி.ஈஸ்வரமூா்த்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.