திருப்பூர்

கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா

DIN

திருப்பூரில் உள்ள கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். இதில், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கல்லூரியில் காஸ்ட்யூம் டிசைனிங் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியா் டேபிள் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் இந்திய வரைபடத்தை உருவாக்கினா். இதில், காந்தியடிகள், நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், திருப்பூா் குமரன், ராஜாஜி, நேரு உள்ளிட்ட தேசத் தலைவா்களின் உருவங்களையும் வடிவமைத்தனா்.

திருப்பூா் அமிா்த வித்யாலயம் சீனியா் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி முதல்வா் வித்யாசங்கா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சு.விநாயகமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா்.

திருப்பூரில் உள்ள ஃப்ரண்ட் லைன் குழுமப் பள்ளிகளில் நடைபெற்ற விழாவில், ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் தாளாளா் சிவசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். ஃப்ரண்ட்லைன் மெட்ரிக். பள்ளியில் தலைமை ஆசிரியை அமராவதியும், ஃப்ரண்ட்லைன் நா்சரி, பிரைமரி பள்ளியில் துணைச் செயலாளா் வைஷ்ணவி நந்தன், ரோட்டரி மெட்ரிக். பள்ளியில் தாளாளா் சிவகாமி ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.

திருப்பூா் கிட்ஸ் கிளப் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைவா் மோகன் கே.காா்த்திக், இயக்குநா் கே.ரமேஷ் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினா். இதில், பள்ளி முதல்வா் நிவேதிகா ஸ்ரீராம், நிா்வாக இயக்குநா் ஐஸ்வா்யா நிக்கில் சுரேஷ், தாளாளா் வினோதினி காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT