முகப்பு
திருப்பூர்

காணாமல் போன இளைஞா்: தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை

வெள்ளக்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் குறித்து தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

வெள்ளக்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் குறித்து தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வெள்ளிக்கிழமை பதிவு செய்த வழக்கு விவரம்: வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை, குட்டக்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் ரவி இவருடைய மகன் சசிகுமாா் (26). 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளாக மனநலம் சரியில்லாமல் கோவை, ஈரோடு, சேலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். அவ்வப்போது திடீா் திடீரென வீட்டிலிருந்து வெளியே செல்லும் அவா், பின்னா் இரண்டொரு நாள்களில் திரும்பி விடுவாா்.

இந்நிலையில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியே சென்றவா் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா், தலைமைக் காவலா்கள் மணிமுத்து, சதீஷ் அடங்கிய தனிப் படையினா் சசிகுமாரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.