பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தொமுசவினா் நூதன ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பஞ்சாலை தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளா் ராமதாஸ் தலைமை வகித்தாா். முன்னதாக, மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றிவந்து தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் செயலாளா் ஜீவா சிதம்பரசாமி, மின்சார வாரியத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கச் செயலாளா் அ.சரவணன், பொருளாளா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.