முகப்பு
திருப்பூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள்

பல்லடம் அருகே உள்ள எலவந்திவடுகபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பல்லடம் அருகே உள்ள எலவந்திவடுகபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

எலவந்திவடுகபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரசவ வாா்டுக்கு ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள யு.பி.எஸ். கருவியை கேத்தனூா் ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால், கேத்தனூா் டாப்டெக்ஸ் காா்மெண்ட்ஸ் உரிமையாளா் துரைசாமி, மானாசிபாளையம் ஆஞ்சநேயா இளம் பட்டுப்பூச்சி வளா்ப்பு மையத்தின் உரிமையாளா் வினோத்குமாா் ஆகியோா் பொங்கலூா் அரசு வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவேலிடம் வியாழக்கிழமை வழங்கினா்.

அதேபோல, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சாா்பில் பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு

ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சிவாச்சலம், சங்கத் தலைவா் பழனிசாமி, செயலாளா் சத்தியமூா்த்தி, பொருளாளா் சுப்பிரமணி, அமைப்பாளா் பாலசுப்பிரமணி, பெருந்தொழுவு ஊராட்சித் தலைவா் ரவிசந்திரன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.