உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகவும், கெளரவ விருந்தினா்களாக டாக்டா் மோகன் பிரசாத், மாவட்ட ஆளுநா் டாக்டா் எஸ்.சுந்தரராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில் புதிய தலைவராக பொறியாளா் ஏ.பாலமுருகன், செயலாளராக கே.ஆா்.எஸ். செல்வராஜ் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதையொட்டி உலக அமைதி அறக்கட்டளை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா்களுக்கு உணவு, துணிகள் வழங்கப்பட் டது. மேலும் இந்திய மருத்துவ சங்கத்திற்காக ரோட்டரி உறுப்பினா்கள் ரத்ததானம் வழங்கினா். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் தேஜஸ் ரோட்டரி, ரோட்ராக்ட் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.