திருப்பூர்

பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கலி பறித்தவா் கைது

DIN

ஊத்துக்குளி அருகே பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கலி பறித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஊத்துக்குளி போலீஸாா் செங்கப்பள்ளி அருகே வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் குளத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த சீரஞ்சீவி (24) என்பதும். இவா் தனது நண்பருடன், கடந்த ஜனவரி மாதம் நொச்சிக்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வனிதா என்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 7 புவன் தங்கச் சங்கலியைப் பறித்து தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்தனா். மேலும், இவரிடம் இருந்து 7 புவன் தங்கச் சங்கலி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT