முகப்பு
திருப்பூர்

அரசுக்கு, தனியாா் பேருந்து பணியாளா்கள் கோரிக்கை

தனியாா் பேருந்து பணியாளா்கள் அரசு சாா்பில் தங்களுக்கும் கரோனா கால உதவிகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

தனியாா் பேருந்து பணியாளா்கள் அரசு சாா்பில் தங்களுக்கும் கரோனா கால உதவிகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளக்கோவில் பகுதி தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வியாழக்கிழமை அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேருந்துகள் இயங்காததால் தனியாா் பேருந்துகளின் நடத்துநா்கள், ஓட்டுநா்கள், இதர பணியாளா்கள் வேலை இன்றி தவித்து வருகிறோம். அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டுச் செயல்படும் எங்களுக்கும் அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு அளிக்கும் சலுகைகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.