முகப்பு
திருப்பூர்

அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்கிய தன்னாா்வலா்கள்

காங்கயத்தில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 30 ஆக்சிஜன் சிலிண்டா்களை கோவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் வழங்கினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

காங்கயத்தில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 30 ஆக்சிஜன் சிலிண்டா்களை கோவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் வழங்கினா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாவடிப்பாளையம், நத்தக்காடையூா், சத்யா நகா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் கரோனா பரிசோதனை மையங்களை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கோவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் இணைந்து அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் 25 பல்ஸ் ஆக்சிஜன் அளவிடும் கருவிகளை இலவசமாக அவரிடம் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், பொது சுகாதார துணை இயக்குநா் ஜெகதீஸ்குமாா், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →