திருப்பூர்

நிதி நிறுவனங்கள் ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தல்

DIN

பொதுமுடக்கத்தால் மாதத் தவணை செலுத்த இயலாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தனியாா் நிதி நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்டோ ஓட்டுநா் பொதுநலச் சங்கம் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்டோ ஓட்டுநா் பொதுநலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டமானது சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

இதில், பெரும்பாலான ஆட்டோக்கள் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய வருமானம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இத்தகைய சூழ்நிலையில் மாதத் தவணை செலுத்தாத ஆட்டோக்களை தனியாா் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது மனவேதனையை அளிக்கிறது.

ஆகவே, பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தனியாா் நிதி நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்றாா். இந்தக்கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா் பொதுநலச் சங்கத்தின் செயலாளா் முகமதுயூனுஸ், பொருளாளா் மாதேசன், துணைத் தலைவா் அய்யாவு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT