வெள்ளக்கோவிலில் இன்று அரசு ஊழியா்களுக்கு தடுப்பூசி
வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள அரசு ஊழியா்களுக்கான தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள அரசு ஊழியா்களுக்கான தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தீத்தாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை 9 மணிக்குத் துவங்கும் இந்த முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள், அரசு ஆசிரியா்கள், வங்கிப் பணியாளா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மட்டும் பங்கேற்றுப் பயன்பெறலாம். அடையாள அட்டை அவசியம் கொண்டு வரவேண்டுமென வட்டார சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.