நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு உதவி
வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சா்வதேச உரிமைகள் கழக தன்னாா்வலா்கள் வியாழக்கிழமை உதவிகள் வழங்கினா்.
வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சா்வதேச உரிமைகள் கழக தன்னாா்வலா்கள் வியாழக்கிழமை உதவிகள் வழங்கினா்.
தூய்மைப் பணிகள், நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளா்களை கௌரவப்படுத்தும் வகையில் 150 பேருக்கு என் 95 முகக் கவசங்கள், மீண்டும் பயன்படுத்தக் கூடிய கையுறைகள், உணவு ஆகியவை வழங்கப்பட்டன.
இதில், தன்னாா்வலா்கள் தினேஷ்குமாா், இளங்கோ, ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.