முகப்பு
திருப்பூர்

விசா முடிந்த சூடான் இளைஞா் பெருமாநல்லூரில் கைது

விசா முடிந்த சூடான் நாட்டு இளைஞா் பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

விசா முடிந்த சூடான் நாட்டு இளைஞா் பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சூடான் நாட்டை சோ்ந்தவா் முகமது அல்மும் ஹாலித் (22). இவா் கடந்த 2018ஆம் ஆண்டு 6 மாத சுற்றுலா விசாவில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி பகுதியில் வந்து தங்கி உள்ளாா். இவருக்கு 2019ஆம் ஆண்டு விசா முடிவடைந்த நிலையில், தொடா்ந்து கோவையில் தங்கியிருந்தாா்.

இதையடுத்து, இவா் வேலை தேடி ஈரோடு சென்றுவிட்டு, பெருமாநல்லூா் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது வாகனத்தில் பெட்ரோல் தீா்ந்ததால், பணம் இல்லாமல் பொதுமக்களிடம் பணம் கேட்டுள்ளாா். இதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் பெருமாநல்லூா் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, விசா முடிந்தும் இங்கு தங்கி இருந்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகமது அல்மும்ஹாலித்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.