உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் மண்டல தோ்தல் அலுவலா்கள் கூட்டம்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மண்டல தோ்தல் அலு வலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மண்டல தோ்தல் அலு வலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடுமலை தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான கீதா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
இதில், சட்டப் பேரவைத் தோ்தலில் மண்டல அலுவலா்களின் பணிகள் குறித்தும், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிக ளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும் மண்டல அலுவலா்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அடிப்ப டை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனம் உத்தரவிடப்பட்டது.
Advertisement
மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல தோ்தல் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலருமான ஜெயந்தி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கனிமொழி முன்னிலை வகித்தாா். இதில் மண்டல அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.