காங்கயம் தொகுதியை ஒதுக்க புதிய நீதிக் கட்சி கோரிக்கை
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெள்ளக்கோவிலில் புதிய நீதிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் கே.தங்கத்தம்பி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா்கள் வெள்ளக்கோவில் சௌந்தரராஜன், கவுந்தப்பாடி அருள்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு காங்கயம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.