திருப்பூர்

திருப்பூரில் ரூ.2.40 லட்சம் மதிப்பிலான 252 அரிசி மூட்டைகள் பறிமுதல்

DIN

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள 252 அரிசி மூட்டைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், எஸ்.ஏ.பி.பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், உரிய ஆவணங்களின்றி ரூ.2.40 லட்சம் மதிப்பிலான 252 அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக வேன் ஓட்டுநரிடம் விசாரித்தபோது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பொல்லிகாளிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் இருந்து குமாா் நகா், பாண்டியன் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளாா்.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அரிசியையும், வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு வேன் ஓட்டுநரிடம் தோ்தல் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT