திருப்பூர்

பல்லடத்தில் ரூ.75 ஆயிரம் பறிமுதல்

DIN

பல்லடம் அருகே சின்னக்கரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரையில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் மோகனா, உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் வாகனத்தில் வந்தவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.75 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த அப்துல் சலாம் முசிக்,(52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து தொகை பறிமுதல் செய்யப்பட்டு பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் தேவராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT