கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவைச் செழியனின் 21 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் நமது கொமுக கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்.
இதனையொட்டி, கோவைச் செழியன் பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே குங்காருபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நமது கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் காங்கயம் எம்.தங்கவேல் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இதில் நமது கொமுக துணை பொதுச் செயலர் யுவராஜ்குமார், மாநில அமைப்பாளர்கள் சண்முகம், சென்னிமலை வடிவேல், இளைஞரணி செயலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.