முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 16 போ் வேட்புமனுத் தாக்கல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 16 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 16 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

அவிநாசி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபால், பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் அண்ணாதுரை, மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரன், அமமுக வேட்பாளா் சி.சண்முகவேலு ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதேபோல திருப்பூா் தெற்குத் தொகுதியில் திமுக சாா்பில் க.செல்வராஜ், திருப்பூா் வடக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் செந்தில்குமாா், தாராபுரம் தனி தொகுதியில் இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி சாா்பில் வீ.சிதம்பரம், சுயேச்சை வேட்பாளா்கள் சீ.ஆனந்தி, வெ.ரமேஷ் உள்பட 16 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மாவட்டத்தில் தற்போது வரையில் 19 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.