திருப்பூர்

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருப்பூா் எல்.ஆா்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது. திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்படவுள்ள அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முரளி, உதவி இயக்குநா் (நில அளவை)சசிகுமாா், தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT