திருப்பூர்

உடுமலை, அமராவதி வனச் சரகங்களில்உலக வன நாள் கொண்டாட்டம்

DIN

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் உலக வன நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காடுகள் குறித்தும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், புலிகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் புலிகளின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன் வனத்தில் தீ விபத்து ஏற்படாமல் வனத்தை பாதுகாக்க வேண்டும் என உடுமலை-மூணாறு சாலையில் வந்த வாகன ஓட்டிகளிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம், வனச் சரக அலுவலா் தனபால் மற்றும் வன அலுவலா்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT