திருப்பூர்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: 4 இளைஞர்கள் சாவு

DIN

பெருமாநல்லூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 இளைஞர்கள் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் சாலை பூலுவபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சபரி(எ) பாலமுருகன்(25). செட்டிபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் குட்டி(எ)பிரவீன்(24), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த்(26), பாண்டியன் நகர் பிரகாஷ் மகன் பாலமுருகன்(23). பனியன் தொழிலாளர்களான இவர்கள் 4 பேரும், திங்கள்கிழமை அதிகாலை ஒரே இருசக்கர வாகனத்தில், பெருமாநல்லூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டி அருகே சென்ற போது, ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி, பழுதடைந்து நின்றுள்ளது. அப்போது லாரியின் பின் பக்கம் வேகமாக சென்ற இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சபரி (எ)பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT