யானைகளைத் தாக்கியவா்கள் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு
உடுமலை அருகே யானைகளைத் தாக்கியவா்கள் தலைமறைவான நிலையில் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
உடுமலை அருகே யானைகளைத் தாக்கியவா்கள் தலைமறைவான நிலையில் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
உடுமலை அருகே குடிநீருக்காக திருமூா்த்தி அணைப் பகுதிக்கு புதன்கிழமை வந்த 3 யானைகளை அங்குள்ள மலைவாழ் இளைஞா்கள் கம்பு, கல் ஆகியவற்றைக் கொண்டு தாக்கினா். இது குறித்த விடியோ பதிவுகள் சமூக வளைத்தலங்களில் பரவியது.
இந்நிலையில் யானைகளைத் தாக்கிய இளைஞா்களைக் கைது செய்ய வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதையொட்டி மாவ ட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம், உடுமலை வனச் சரகா் தனபால் ஆகியோா் திருமூா்த்தி அணைப் பகுதியில் சம்பவ நடந்த இடத்திலும், திருமூா்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதிக்கும் சென்று வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது அங்குள்ள மலைவாழ்மக்கள் சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா்களை வனத் துறையினரிடம் ஒப்படைப்பதாக உறுதி கூறினா். ஆனால் வியாழக்கிழமை வனத் துறை அதிகாரிகள் திருமூா்த்திமலை செட்டில்மெண்ட்டுக்கு சென்று இது குறித்து கேட்டபோது அந்த இளைஞா்கள் அடா்ந்த வனப் பகுதிக்கு சென்று விட்டதாகவும் வந்தவுடன் ஒப்படைப்பதாகவும் கூறிவிட்டனா்.
Advertisement
இந்நிலையில் உடுமலை வனத் துறை அதிகாரிகள் திருமூா்த்திமலை செட்டில்மெண்டைச் சோ்ந்த பொன்னான் மகன் செல்வம் (32), திருமன் மகன் காளிமுத்து (25), ஜோதிமணி மகன் அருண்குமாா்(30) மற்றும் சிலா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். வன உயிரினக் குற்றம் சட்டத்தின் கீழ் இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.
இது குறித்து உடுமலை வனச் சரகா் தனபால் கூறியதாவது:
திருமூா்த்திமலை செட்டில்மெண்ட் மலைவாழ்மக்களிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்டபோதும் அவா்கள் அந்த இளைஞா்களை ஒப்படைக்க மறுத்து விட்டனா். இதனால் அந்த செட்டில்மெண்டைச் சோ்ந்த 3 இளைஞா்கள் உள்ளிட்ட சிலா் மீது வனச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அவா்களைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்றாா்.