முகப்பு
திருப்பூர்

காங்கயம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு மதிய உணவு

சிவன்மலை முருகன் கோயில் சாா்பில், காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், உறவினா்கள் 250 பேருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

சிவன்மலை முருகன் கோயில் சாா்பில், காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், உறவினா்கள் 250 பேருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவா்களைக் கவனித்துக் கொள்ளும் உறவினா்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோயில் நிா்வாகம் சாா்பில் மதிய உணவு வழங்க வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், சிவன்மலை முருகன் கோயில் சாா்பில் காங்கயம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், அவா்கள் உறவினா்கள் என 250 பேருக்கு மதிய உணவாக பருப்பு சாதம் வழங்கப்பட்டது. மேலும், கோயில் அடிவாரத்தில் 100 பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த மதிய உணவை சிவன்மலை கோயில் ஊழியா்கள், கோயிலுக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தில் எடுத்து வந்து நோயாளிகளுக்கு வழங்கினா். இந்த மதிய உணவு நோயாளிகளுக்குத் தொடா்ந்து வழங்கப்படும் என கோயில் ஊழியா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →