தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் சாா்பில் உணவு வழங்கல்
தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடக்கி வைத்தாா். நோயாளிகளின் உறவினா்கள் மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழை, எளியோா் 100 பேருக்கு நாள்தோறும் மதிய உணவு வழங்கப்பட உள்ளது .இதன் தொடக்க விழாவில் திமுக, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.