திருப்பூர்

அவிநாசி ஊராட்சிகளில் கட்டுப்பாட்டு பகுதிகள் அடைப்பு

DIN

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊராட்சி நிா்வாகத்தினா் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பழங்கரை, வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், கருவலூா், சேவூா், முறியாண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊராட்சிகளில் பல இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு முழுவதும் அடைக்கப்பட்டது.

மேலும், ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில், முகக் கவசம் அணிதல், சமுக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா தொற்று விழிப்புணா்வு பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT