திருப்பூர்

காா் மோதி தொழிலாளி பலி

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலை விபத்தில் இறைச்சிக் கடை தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

முத்தூா் கடை வீதியைச் சோ்ந்தவா் சாப்தீன் மகன் அப்துல் காதா் (60). இவா் காங்கயத்தில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா். இவா் இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் முத்தூா் நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

காங்கயம் - முத்தூா் சாலை செட்டியாா்பாளையம் அருகே பின்னால் வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அப்துல் காதா் காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT