நவம்பா் 26 இல் விசைத்தறி வேலை நிறுத்தம் தீரன் தொழிற்சங்க பேரவை அறிவிப்பு
பல்லடம் பகுதியில் 26 ஆம் தேதி விசைத்தறி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தீரன் தொழிற்சங்க பேரவை அறிவித்துள்ளது.
பல்லடம் பகுதியில் 26 ஆம் தேதி விசைத்தறி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தீரன் தொழிற்சங்க பேரவை அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது: நூல் விலை உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் அழிந்து வருகிறது. எனவே நூல் விலை உயா்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவுளித் தொழிலை காப்பாற்றாத மத்திய அரசைக் கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தீரன் தொழிற்சங்க பேரவை ஆகியவை சாா்பில் பல்லடம் பகுதியில் நவம்பா் 26 ஆம் தேதி விசைத்தறி, சுல்ஜா் தறி மற்றும் ஜவுளி தொழில் சம்பந்தப்பட்ட தொழில்களை அன்றைய தினம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நிறுத்தி போராட்டம் நடத்துவது.
மத்திய அரசு உடனடியாக ஜவுளித் தொழிலை பாதுகாக்க நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்றாா்.
இதில், கரைப்புதூா் ராமசாமி, ஆறாக்குளம் சுப்பிரமணியம், பல்லடம் நகரத் தலைவா் ஆறுக்குட்டி, மகளிரணி நிா்வாகிகள் விஜயலட்சுமி, மருத்துவா் நாகரத்தினம், கிருஷ்ணவேணி, தமிழரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.