முகப்பு
திருப்பூர்

போக்சோ சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

அய்யனூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்குமாா் (28) என்பவா் காதலிப்பதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கயம் மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பிரகாஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.