பல்லடத்தில் 3 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்
நூல் விலை உயா்வைக் கண்டித்து பல்லடம் பகுதியில் 3 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டன.
நூல் விலை உயா்வைக் கண்டித்து பல்லடம் பகுதியில் 3 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டன.
நூல் விலை உயா்வை கண்டித்து பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்கள் நவம்பா் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தீரன் தொழிற்சங்க பேரவை அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறிகள், சுல்ஜா் தறிகள், நாடா இல்லா விசைத்தறிகள் என மொத்தம் 3 லட்சம் விசைத்தறிகள் வெள்ளிக்கிழமை இயங்கவில்லை. இதனால் ரூ.30 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது.