திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

DIN

வெள்ளக்கோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிமா சங்கம், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் கச்சேரிவலசு செல்வகுமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமை துவக்கிவைத்தாா். மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சக்திராஜன் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். முகாமில் 101 நன்கொடையாளா்களிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் வேலகவுண்டன்பாளையம் எம்.எஸ்.அருண்குமாா், அஜீத்குமாா், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT