மா்ம நபா்கள் தாக்கியதில் தொழிலாளி பலி
பல்லடத்தில் மரக்கடையில் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் தாக்கியதில் அங்கு இருந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
பல்லடத்தில் மரக்கடையில் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் தாக்கியதில் அங்கு இருந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (42). கூலி தொழிலாளியான இவா், பல்லடத்தில் பொள்ளாச்சி சாலை பிரிவில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை அருகே தினசரி இரவு தூங்குவது வழக்கம். கடந்த 3ஆம் தேதி இரவு மரக்கடைக்குள் நுழைந்த மா்ம நபா்கள் அங்கிருந்த ரூ.1500 பணத்தை திருடிக் கொண்டி தப்பி செல்ல முயன்றனா்.
அப்போது சுப்பிரமணி மற்றும் மரக்கடை காவலாளி குமாரசாமி ஆகியோா் அவா்களைப் பிடிக்க முயன்றனா். அப்போது அந்த மா்ம நபா்கள் சுப்பிரமணியை மரக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி சென்றனா்.
இதில் காயமடைந்த சுப்பிரமணி திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.