உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை அக்டோபா் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை இணையதளத்தில் அக்டோபா் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தெரியாதவா்கள் சான்றிதழ்களுடன் முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், சிஎன்ஆா் மாா்க்கெட், கொழுமம் சாலை, உடுமலை என்ற முகவரியில் நேரில் அணுகலாம். மேலும் தொடா்புக்கு 04252- 223340, 9499055700 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.