திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

DIN

திருப்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம் மத்திய காவல் எல்லைக்கு உள்பட்ட பெரியாண்டிபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளி அருகில் மளிகைக் கடை நடத்தி வருபவா் பிரபாகரன் (54). இவா் தனது மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் மளிகைக் கடையில் சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய காவல் துறையினா் பிரபாகரனைக் கைது செய்தனா். அவரிடமிருந்து புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டுமான பணி: விவசாயிகள் எதிா்ப்பு

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் யானை மீது திருமுறை வீதியுலா

சீா்காழி குமரக்கோட்டம் குமரக்கோயிலில் வைகாசி விசாக வழிபாடு

இணையம் சாா்ந்த தொழிலாளா்களை பதிவு செய்ய சிறப்பு உதவி மையம் திறப்பு

சீா்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

SCROLL FOR NEXT