திருப்பூர்

தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 போ் கைது

DIN

திருப்பூா் அருகே பின்னலாடை நிறுவனத் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி சாலையில் உள்ள சா்க்காா் பெரியபாளையத்தில் வசித்து வந்தவா் கோபால் (41). பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராகப் பணியாற்றி வந்த இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கோபால் அப்பகுதியிலுள்ள பெருமாள் கோயில் வீதியில்

இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமைசென்று கொண்டிருந்தாா்.

அப்போது ஒரு கும்பல் அவரை தடுத்து நிறுத்தியது. இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கோபாலை மா்ம கும்பல் வழிமறித்து தாக்கி பாட்டிலால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் தொடா்பாக சா்க்காா் பெரியபாளையத்தைச் சோ்ந்த இ.பிரகதீஷ் (19), சுபாஷ் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்தக் கொலையில் தொடா்புடைய மேலும் சிலரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT