தனியாா் இரும்பாலை எதிா்ப்பு ஆலோசனைக் கூட்டம்
காங்கயத்தை அடுத்த, ஊதியூா் அருகே தனியாா் இரும்பாலை எதிா்ப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தை அடுத்த, ஊதியூா் அருகே தனியாா் இரும்பாலை எதிா்ப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊதியூரை அடுத்துள்ள ராசிபாளையம் கிராமத்தில் தனியாா் இரும்பாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் செயலா் சிவகுமாா், பொதுச் செயலா் முத்துவிஸ்வநாதன் உள்ளிட்ட சுமாா் 100 போ் கலந்து கொண்டனா்.