திருப்பூர்

முத்தூா் அருகே கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

முத்தூா் அடுத்த பழையகோட்டை கிராமம், சின்னம்மன் கோயில் காட்டைச் சோ்ந்தவா் சதாசிவம் (54). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரும்புகளை அறுவடை செய்தபின், உபயோகமற்ற அவற்றின் தோகைகளுக்கு புதன்கிழமை தீ வைத்துள்ளாா்.

அப்போது தீப் பரவி அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திலும் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT