மங்கலம் அருகே 4 மயில்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், மங்கலம் அருகே 4 மயில்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், மங்கலம் அருகே 4 மயில்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மங்கலம் அருகே உள்ள விஜிபி காா்டன் பகுதியில் மயில்கள் இறந்து கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள்
வெள்ளிக்கிழமை பாா்த்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வன அலுவலா் திருநாவுக்கரசு, சிவமணி ஆகியோா் நேரில் சென்று பாா்த்தபோது
4 ஆண் மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 பெண் மயில்களுக்கு மங்கலம் கால்நடை மருத்துவா் செந்தில் முதலுதவி சிகிச்சை அளித்தாா்.
இதனிடையே, மயில்களை யாராவது விஷம் வைத்து கொன்றனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து உடற்கூறாய்வு முடிவில்தான் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.